நினைக்க நினைக்கும் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைக்க நினைக்கும் நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

கர்ணன்

நேற்று (21/08/2012), லோட்டஸ் பிஜே ஸ்தேட் திரையரங்கில் கர்ணன் பார்த்தேன். மலை 5.55 காட்சிக்கு அரங்கம் பாதி நிறைந்திருந்த்து. பழைய பிரதியை மீண்டும் கணினி மூலம் புதுபித்த மூன்று மணி நேர படம். இதை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பாலும் இளையோர்கள். 48 வருடங்கள் கடந்தும் இந்த படத்திற்கு இன்றும் மக்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.


நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.


Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)

செவ்வாய், 25 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

திருஇந்திய எழுச்சி!

அன்று (25/11/2007) மலேசிய திருநாட்டின் சரித்திரத்தில் எழுதவேண்டிய நன்னாள்; இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது அந்த எழுச்சி நாள். உலகமே வியந்து அதிர்ந்த நாள். 50 வருட மலேசிய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட சரித்திர நாள். பல நூராயிரம் மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக உரிமைக் குரல் எழுப்பிய பொன்னாள்!

இந்நாளை நினைத்துப்பார்க்கையில் அன்று மகாகவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளுவில் 5-வது சரணம் மனதைத் துளைத்தது...

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.


இந்த எழுச்சிக்கு வித்திட்ட ஐம்பெரும் காவிய மன்னர்களுக்கு இன்றும் சிறைவாசம். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

வியாழன், 6 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

ஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...

(படத்தின் மேல் சொடுக்குங்கள்)

1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.



2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.


3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.


4. திரிவேணி சங்கமம்.


5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.


6. வாரநாசி கங்கை நதி.


7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.


8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.


9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.



10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.


11. மதுரை நாயக்கர் மஹால்.


12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.


13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று


14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.


15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.