ஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...
(படத்தின் மேல் சொடுக்குங்கள்) 1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.


2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.

3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.

4. திரிவேணி சங்கமம்.

5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.

6. வாரநாசி கங்கை நதி.

7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.

8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.

9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.


10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.

11. மதுரை நாயக்கர் மஹால்.

12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.

13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று

14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.

15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.