புதன், 12 டிசம்பர், 2012

ரவி சங்கர்

வாழ்க அவர் இசை!

புதன், 22 ஆகஸ்ட், 2012

கர்ணன்

நேற்று (21/08/2012), லோட்டஸ் பிஜே ஸ்தேட் திரையரங்கில் கர்ணன் பார்த்தேன். மலை 5.55 காட்சிக்கு அரங்கம் பாதி நிறைந்திருந்த்து. பழைய பிரதியை மீண்டும் கணினி மூலம் புதுபித்த மூன்று மணி நேர படம். இதை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பாலும் இளையோர்கள். 48 வருடங்கள் கடந்தும் இந்த படத்திற்கு இன்றும் மக்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.


நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.


Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)

திங்கள், 16 ஜூலை, 2012

சங்க கால உணவு திருநாள் 2012

நேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

சங்க கால உணவு திருநாள் 2012


வரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.

பரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.

தேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.

நல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…

வெள்ளி, 16 மார்ச், 2012

பிரம்மம்

"இந்து மதத்தின் உருவ வழிபாடு அன்றைய மேலோட்டமான ஐரோப்பியர் நினைத்தது போல பொருள்களை வணங்கும் அறியாமை அல்ல. இந்து மதத்தின் உருவ வழிபாடு நுட்பமான ஒரு முரணியக்கம் கொண்டது. அதன் தத்துவார்த்தமான சாராம்சம் என்பது உருவமற்ற, அடையாளமற்ற, எல்லையற்ற, மானுடப் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இறை உருவகம்தான். அதை நாம் பிரம்மம் என்றோம். அது கூட ஒரு சொல்தான். இறை அந்த சொல்லுக்கும் அப்பாற்பட்டது."

இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.