தமிழ் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

கர்ணன்

நேற்று (21/08/2012), லோட்டஸ் பிஜே ஸ்தேட் திரையரங்கில் கர்ணன் பார்த்தேன். மலை 5.55 காட்சிக்கு அரங்கம் பாதி நிறைந்திருந்த்து. பழைய பிரதியை மீண்டும் கணினி மூலம் புதுபித்த மூன்று மணி நேர படம். இதை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பாலும் இளையோர்கள். 48 வருடங்கள் கடந்தும் இந்த படத்திற்கு இன்றும் மக்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.


நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.


Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)

செவ்வாய், 4 நவம்பர், 2008

தமிழா! மலேசியப் பணத்தில் தமிழா?

ஆகஸ்டு 2008-ன் செம்பருத்தி மாத இதழில், மொழியின் முகங்கள் அங்கத்தில் 29, 30, 31-ஆம் பக்கங்களில் உருவான படைப்பை பார்த்தீர்களா நீங்கள்? நான் பார்த்தேன்; படித்தேன்; மலேசியாவுக்கு முன் மலாயாவில் தாய் தமிழுக்கு கிடைத்த உரிமையை உணர்ந்தேன்; அகம் நெகிழ்ந்தேன். ஆம், அருண், கிள்ளான் அவர்களின் படைப்பில் உருவான ‘மலேசியப் பணத்தில் தமிழ் எழுத்துகள்’ என்ற வரலாற்றுக் கட்டுரையை படித்து சிந்தித்தேன்.


தொடக்கக்கால மலேசியா, அதாவது மலாயாவில் பல்லின மக்களின் ஒற்றுமையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ், சீனம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்ட பணத்தாட்கள் புழக்கத்தில் உள்ளதை இந்த கட்டுரை வழி அருண் அவர்கள் நன்றாக தெளிவிக்கின்றார்.

1935-ஆம் ஆண்டிலிருந்து 1938-ஆம் ஆண்டு வரை சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மட்டுமே பயன்படுத்த பணநோட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் வியப்பான செய்தியும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.


தமிழ் மொழி இந்திய, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நாணயங்களில் உரிமையாய் குடிக்கொண்டிருந்தாலும்; உண்மையான ஆசியா (Truly Asia) என்று மார்தட்டும் மலேசியர்களின் நாணயங்களில் தற்பொழுது தமிழ் எழுத்துக்கள் பொறிக்காததை நம் மண்டையைத் தட்டாமல் தட்டிச் சுட்டிக்காட்டியதற்கு அருணுக்கும் அவர் தம் கட்டுரைக்கும் மற்றும் மக்களின் விழிபுணர்வுக்கு பாடுப்படும் செம்பருத்திக்கும் தலைவணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்!