வியாழன், 30 டிசம்பர், 2010

மலேசியா வெற்றி!

14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.



கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.

இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.


இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!

இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.

MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)



நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/

வியாழன், 2 டிசம்பர், 2010

"2012" - தமிழ் மேடை நாடகம்

நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.


இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.


இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.

இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.

அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.

இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!

எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.