மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 டிசம்பர், 2010

மலேசியா வெற்றி!

14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.



கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.

இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.


இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!

இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.

MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)



நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/

செவ்வாய், 25 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

திருஇந்திய எழுச்சி!

அன்று (25/11/2007) மலேசிய திருநாட்டின் சரித்திரத்தில் எழுதவேண்டிய நன்னாள்; இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது அந்த எழுச்சி நாள். உலகமே வியந்து அதிர்ந்த நாள். 50 வருட மலேசிய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட சரித்திர நாள். பல நூராயிரம் மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக உரிமைக் குரல் எழுப்பிய பொன்னாள்!

இந்நாளை நினைத்துப்பார்க்கையில் அன்று மகாகவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளுவில் 5-வது சரணம் மனதைத் துளைத்தது...

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.


இந்த எழுச்சிக்கு வித்திட்ட ஐம்பெரும் காவிய மன்னர்களுக்கு இன்றும் சிறைவாசம். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!