"இந்து மதத்தின் உருவ வழிபாடு அன்றைய மேலோட்டமான ஐரோப்பியர் நினைத்தது போல பொருள்களை வணங்கும் அறியாமை அல்ல. இந்து மதத்தின் உருவ வழிபாடு நுட்பமான ஒரு முரணியக்கம் கொண்டது. அதன் தத்துவார்த்தமான சாராம்சம் என்பது உருவமற்ற, அடையாளமற்ற, எல்லையற்ற, மானுடப் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இறை உருவகம்தான். அதை நாம் பிரம்மம் என்றோம். அது கூட ஒரு சொல்தான். இறை அந்த சொல்லுக்கும் அப்பாற்பட்டது."
இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.
விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 16 மார்ச், 2012
வெள்ளி, 9 ஜனவரி, 2009
ஜனவரி, வருடத்தின் ஆரம்பமா இறுதியா?
இந்த கேள்விகளுக்கு மார்க் சில்வர் (Marc Silver) பின்வரும் தன் வலைபதிவில் பதிலளித்திருக்கின்றார். http://ngm.typepad.com/pop_omnivore/2009/01/how-january-wen.html.
ஜனவரி (January), ஜானுஸ் (Janus) என்ற இருதலைகள் கொண்ட ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும். ஆரம்பமும் இறுதியையும் பிரதிபலிக்கும் கடவுள், ஜானுஸ் (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்). ரோமானிய காலத்தில் ஜனவரி வருடத்தின் 11-வது மாதமாகவும் மார்ச் (March) வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில்தான் ரோமானியர்கள் பயிர்களை விளைவித்து விட்டு போருக்கு செல்வார்களாம். போருக்குரிய கடவுளான மாஸ்-லிருந்து (Mars) மார்ச் மாதம் பெயர் பெற்றிருக்கிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்தஸ் சீசர் (Augustus Caesar) காலத்தில் ரோமானியர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை போர்காலத்தில், அதாவது வழக்கமான மார்ச் மாதத்தில் நிர்ணயிப்பதைவிட அதற்கு இரண்டு மாதங்கள் முன்பே அரசை நிர்ணயிப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரோமானியர்கள் தங்கள் அரசமைப்பை ஜனவரி மாதத்தில் அமைத்து ஜனவரியே வருடத்தின் முதல் மாதமாகவும் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
இதே மாதிரிதான் அமெரிக்காவிலும் மார்ச் மாதத்தில் அதிபருக்கான பதவி பிரமாணம் ஏற்கும் சடங்கு வழக்கத்தில் இருந்தது. பிறகு, அமெரிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, 1933-ல் அமெரிக்க அதிபராக பிரங்கிலின் டிலானோ ரோஸ்வெல்ட்-தான் (Franklin Delano Roosevelt) ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பொருப்பேற்ற முதல் நபராவார்.
ஜனவரி (January), ஜானுஸ் (Janus) என்ற இருதலைகள் கொண்ட ரோமன் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாகும். ஆரம்பமும் இறுதியையும் பிரதிபலிக்கும் கடவுள், ஜானுஸ் (கீழ்கண்ட படத்தை பார்க்கவும்). ரோமானிய காலத்தில் ஜனவரி வருடத்தின் 11-வது மாதமாகவும் மார்ச் (March) வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில்தான் ரோமானியர்கள் பயிர்களை விளைவித்து விட்டு போருக்கு செல்வார்களாம். போருக்குரிய கடவுளான மாஸ்-லிருந்து (Mars) மார்ச் மாதம் பெயர் பெற்றிருக்கிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்தஸ் சீசர் (Augustus Caesar) காலத்தில் ரோமானியர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை போர்காலத்தில், அதாவது வழக்கமான மார்ச் மாதத்தில் நிர்ணயிப்பதைவிட அதற்கு இரண்டு மாதங்கள் முன்பே அரசை நிர்ணயிப்பது என்று தீர்மானித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரோமானியர்கள் தங்கள் அரசமைப்பை ஜனவரி மாதத்தில் அமைத்து ஜனவரியே வருடத்தின் முதல் மாதமாகவும் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
இதே மாதிரிதான் அமெரிக்காவிலும் மார்ச் மாதத்தில் அதிபருக்கான பதவி பிரமாணம் ஏற்கும் சடங்கு வழக்கத்தில் இருந்தது. பிறகு, அமெரிக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, 1933-ல் அமெரிக்க அதிபராக பிரங்கிலின் டிலானோ ரோஸ்வெல்ட்-தான் (Franklin Delano Roosevelt) ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பொருப்பேற்ற முதல் நபராவார்.
செவ்வாய், 6 ஜனவரி, 2009
சம்பளம் - விளக்கம்
நேற்றுதான் (5/1/2009) கடந்த மாத (டிசம்பர்) சம்பளச் சீட்டு (Pay Slip) எனக்கு கிடைக்கப்பெற்றேன். கிடைத்ததும் அதை என் அலுவலக மேசைமீது இருந்த ஒரு புத்தகத்தின் இடுக்கில் வைத்தேன். இன்று அந்த சம்பளச் சீட்டை எடுக்கையில் அந்த புத்தகத்திலிருந்த சில பக்கங்கள் எதேர்ச்சையாகத் திரும்பி கீழ்கண்ட குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
“தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.”
'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.
“தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.”
'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.
வெள்ளி, 26 டிசம்பர், 2008
பொன்மொழி - விளக்கம்
பொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு?
"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.
அதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது."
கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.
"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.
அதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது."
கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)