இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 அக்டோபர், 2010

டெல்லி 2010 (DELHI 2010)


19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, டெல்லி 2010 (DELHI 2010), 3/10/2010-ஆம் நாள் பிரமாண்டமாக புதுடெல்லியில் தொடங்கி அதே பிரமாண்டத்துடனும் கோலாகலமான கலை நிகழ்ச்சியுடனும் நேற்று (14/10/2010) நிறைவு பெற்றது.

பதக்க பட்டியலில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை பெற்று, 2-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பல இன்னல்களை கடந்து, பன்னிரெண்டு நாட்கள் உற்சவத்தை வெற்றிகரமாக RM1853 கோடி (US$6 billion) விளையாட்டு போட்டியை இந்தியா நடத்தி சரித்திரம் படைத்தது.

வாழ்த்துகள் இந்தியா!



மேலும் தெரிந்துக்கொள்ள:

1. http://www.cwgdelhi2010.org/
2. http://en.wikipedia.org/wiki/2010_Commonwealth_Games
3. http://www.themalaysianinsider.com/sports/article/delhi-overcomes-challenges-to-close-on-a-high/
4. http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18001&id1=12
5. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=14&Value2=7314&value3=I
6. http://indiatoday.intoday.in/site/specials/cwg/index.jsp
7. http://www.bbc.co.uk/blogs/matthewpinsent/2010/10/what_will_commonwealth_legacy.html

இன்னல்களை பற்றி தெரிந்துக்கொள்ள:
1. http://www.bbc.co.uk/news/world-south-asia-11525504

ஞாயிறு, 16 நவம்பர், 2008

மீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1

14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்!

மூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:
http://www.isro.org/pslv-c11/photos/moon_images.htm



மேல் விபரங்களுக்கு:
http://www.isro.org/pressrelease/Nov14_2008.htm
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2272&cls=row4

வியாழன், 6 நவம்பர், 2008

நினைக்க நினைக்கும் நாள்

ஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...

(படத்தின் மேல் சொடுக்குங்கள்)

1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.



2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.


3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.


4. திரிவேணி சங்கமம்.


5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.


6. வாரநாசி கங்கை நதி.


7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.


8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.


9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.



10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.


11. மதுரை நாயக்கர் மஹால்.


12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.


13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று


14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.


15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.

புதன், 22 அக்டோபர், 2008

வெற்றிப் பாதையில் சந்திரயான்-1

22/10/2008, புதன்கிழமை காலை 6.20 மணிக்கு ஆந்திர பிரதேசதிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையதிலுருந்து, சந்திரயான்-1 (Chandrayaan-1) என்ற ஆளில்லா செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

1380 கிலோ கிராம் கொண்ட சந்திரயான்-1யை தாங்கியவாறு 44.4 மீட்டர் உயரமும் 316 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கேட் (Polar Satelite Launch Vehicle C11), ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 2 நொடிகளில் பூமியின் சரியான சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 386 கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த திட்டத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் திரு. மயில் சாமி அண்ணாத்துரை.

சந்திரயான்-1 பூமியிலிருந்து 387,000 கிலோ மீட்டருக்கு அப்பால்; அதாவது நிலவை 100 கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வந்து, தகவல்களை சேகரித்து பூமியில் உள்ள தரை நிலையத்துக்கு அத்தகவல்களை அனுப்பும். இந்த இலக்கு இன்னும் 15 நாட்களில் அடையப்படும். அதுமட்டுமல்ல, சந்திரயான்-1னிலிருந்து மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) என்ற கருவியை நிலவின் தரைப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு, இந்திய நாட்டு தேசிய கொடியையும் நிலவின் தரைப்பகுதிக்கு இறக்கப்படும்.

வாழ்த்துக்கள் இந்தியா! இந்தியா போலெஹ் (India Boleh)!

மேல் விபரங்களுக்கு:
http://www.isro.gov.in/chandrayaan/htmls/home.htm
http://www.isro.gov.in/pslv-c11/brochure/index.htm