ஞாயிறு, 16 நவம்பர், 2008

மீண்டும் சரித்திரம் படைத்தது சந்திரயான்-1

14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்!

மூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:
http://www.isro.org/pslv-c11/photos/moon_images.htm



மேல் விபரங்களுக்கு:
http://www.isro.org/pressrelease/Nov14_2008.htm
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2272&cls=row4

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தத்தம் தேசியக் கொடியுடன் நிலவில் இறங்கியுள்ளன. இப்போது நான்காவதாக இந்தியா.

ஆசிய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
இரண்டாவது நிழற்படத்தில் காலடித்தடம் தெரிவதுபோல் உள்ளதே?

மு.வேலன் சொன்னது…

[அ.நம்பி] நீங்கள் சொல்வது உண்மை. ஆசிய நாடுகளில், ஜப்பானை அடுத்து இந்தியாதான் தேசியக் கொடியை இறக்கியுள்ளது; அடுத்து மனிதனையும் இறக்கவுள்ளது.

[து. பவனேஸ்வரி] பார்க்க அப்படி இருக்கிறது ஆனால், அது மேடு பள்ளமான நிலவின் தரை. நுணுக்கமான உங்கள் பார்வை போற்றத்தக்கது.

இன்றைய தினமலரில் விஞ்ஞானி அண்ணாதுரையைப் பற்றிய தகவல்
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2291&cls=row3