சனி, 15 நவம்பர், 2008

முதல் முதலாய்...

‘என்னை விட்டுப் போய்விடு’, என் வாழ்வில் முதல் முதலாய் திரையரங்கில் பார்த்த ஸ்பேய்ன் (Spain) நாட்டு திரைப்படம். 13/11/2008, ஜி. எஸ். சி.-யில் (GSC), திரு. எஸ். டி. பாலா அவர்களின் அழைப்பின் பேரில், ‘என்னை விட்டுப் போய்விடு’ (Get Away From Me) என்ற திரைப்படத்தைப் பார்த்து இரசித்தேன். இந்த புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்திய திரு. எஸ். டி. பாலா அவர்களுக்கு நன்றி!

13-லிருந்து 23-ஆம் நாவம்பர் 2008 வரை நடைப்பெற்றிருக்கும் 9வது ஐரோப்பிய ஒன்றியத்தின் திரைப்பட விழாவை (9th European Union Film Festival) முன்னிட்டு, ஜி. எஸ். சி.-யில் காண்பிக்கப்பட்ட ‘என்னை விட்டுப் போய்விடு’-க்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.


சுமார் இரண்டு மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த படம் ஒரு அப்பாவையும் அவர் தம் மகனையுமே சார்ந்து, அவர்களின் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களையும் ஆங்கிலத் திரைப்படங்களையும் மட்டுமே எப்பொழுதாவது திரையரங்கில் பார்ப்பதுண்டு. ஆனால், இந்த படங்களைப் போன்ற பாணியில் இந்த (Get Away From Me) படம் நகராமல் சற்று மாறுபட்டிருந்தது அதன் கதை சொல்லும் விதம். படம் மெல்லவே நகர்ந்தாலும் இறுதிவரை ஆர்வத்துடனே படத்தைப் பார்த்து முடித்தேன்.

திரையரங்கில் விளக்கை அனைத்த பிறகுதான் உள்ளே சென்றோம். அரங்கம் நிரைந்திருந்ததால் முன் வரிசையில் மட்டுமே அமர இடம் கிடைத்தது. அப்பொழுதுப் பார்க்க முடியாத முகங்களை, திரைப்படம் முடிந்ததும் ஏற்றப்பட்ட ஒளியில் பார்த்தபோது சுமார் நூரில் 5 முகங்களே இந்தியர்களைச் சேர்ந்தது, எங்களையும் உட்பட.

1. இதற்கு என்ன காரணம்?

2. ஐரோப்பிய மொழியில் உருவாகும் நல்ல படங்களையும் பார்க்கலாம்தானே?

4 கருத்துகள்:

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
ஐரோப்பியத் திரைப்படங்களை ஏன் நம்மவர்கள் பார்ப்பதில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்குக் காரணம், ஐரோப்பியத் திரைப்படங்கள் பற்றி யாரும் நம்முடன் பேசுவதில்லை. அதனைப் பற்றிய விளம்பரங்களும் குறைவாகவே வருகின்றன. ஐரோப்பியப் படங்கள் என்ற ஒன்று இருப்பதே பல பேருக்குத் தெரிவதில்லை. அப்படியே தெரியவந்தாலும் அதனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்வதற்கு நாம் முயலுவதில்லை. முடிவாக, பிற மொழிப் படங்களைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை என்றும் கூறலாம்.

மு.வேலன் சொன்னது…

[து. பவனேஸ்வரி] ஐரோப்பியத் திரைப்படங்களை மட்டும் அல்ல, நல்ல தரமான நம் மொழி படங்களையும் விளம்பரப் படிதினால்தான், அந்தப் படங்களைப் பற்றி நம் மக்களுக்குத் தெரியவரும். இதில் இந்திய ஊடகங்களின் பங்களிப்பு அதிமாக இருக்க வேண்டும்; நல்லத் தரமான இரசிகர்களையும் உருவாக்க முற்பட வேண்டும். திரைபட இரசிகர்களும் தங்களின் இரசிக்கும் திறனை உயர்த்திக் கொள்ளல் வேண்டும். தங்களின் இரசிக்கும் தரத்தை உயர்த்த வரும் மாற்றங்களோடு மாற தயாராக வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

எனக்குத் தெரியாதே...அப்புறம் எப்படி பார்ப்பது?

மு.வேலன் சொன்னது…

[பிளாகர் இனியவள் புனிதா] இப்பொழுதுதான் தெரிந்தாகிவிட்டதே. பிறகென்ன, இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ளன. அதற்குள் பார்த்துவிடலாமே!