வெள்ளி, 24 அக்டோபர், 2008

தீபாவளியை இப்படியும் அங்கீகரிக்கலாம்...

தீபாவளி நெருங்குகிறது; மக்கள் கூட்டமோ குட்டி இந்தியாக்களை நெருக்குகிறது. இந்த இந்து பண்டிகை மலேசிய வாழ் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்ந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கும், வாழ போகும் மொத்த மலேசிய இந்தியர்களுக்கு ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறது. இத்தீப பெருநாள் பல நோக்கங்களைக் கொண்டு இந்துக்களால் கொண்டாடப்பட்டாலும், ஒன்றுக்கூடி மகிழ்ச்சிகளைப் பரிமாரிக்கொள்வதையும் ஒரு நோக்கமாக வைத்திருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலோர் தீபாவளி முதல் நாள் முன்னோர்களை வழிப்படுவதையும் இந்த பெருநாளின் முக்கிய அங்கமாக தொன்றுத்தொட்டுக் கடைப்பிடிக்கின்றனர்.

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற கூற்றுக்கேற்றார்போல் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தீபாவளிக்கு முன் தீபாவளி விளம்பரங்கள் வந்து போய் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முன்பு ஒளியேற்றியதுபோல் இக்காலகட்டத்தில் பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளியேற்றுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.

இன்றும் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி விளம்பரங்களை ஒளியேற்றும் ஒரு சில பொறுப்புள்ள நிறுவனங்களின் செயல் பாராட்டுக்குரியது. இது மலேசிய திருநாட்டில் கொண்டாடப்படும் ஒர் இந்து பண்டிகைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்து மதத்தவருக்கும் கிடைக்கும் ஒர் அங்கீகாரமாகவும் அமைகிறது.

நல்லெண்ணம் படைத்த இந்த நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பெரும்பாலான பண்டிகை விளம்பரங்கள் கண்டிப்பாக நல்ல கருவை மையமாக தாங்கி மலரும். அப்படி மலர்ந்த இந்தாண்டு தீபாவளி விளம்பரங்களில் பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்தின் தீபாவளி விளம்பரமும் ஒன்று. அதை கீழ்கண்டு மகிழலாம்.

தீபாவளி வாழ்த்துக்கள்!


5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Dear Velan,

I'm not able to write this in Tamil.....that's my biggest regret. However, I'm very proud of you and for your effort in creating such a wonderful blog in Tamil.

I indeed enjoyed reading all the articles and my favorite is the "Vetrip Pathayil Santhirayan-1". That's an awesome article.

Wish you more success. Good Luck.

Rgds, Mon

பெயரில்லா சொன்னது…

Dear brother......I enjoyed reading this Diwali article. Being away from home and living abroad didn't stop me from enjoying the festival mood.

All the Malaysian Indians are having the Diwali the celebration tomorrow (2 days earlier than the actual day).

Anyway......I'm proud of you for creating this blog in Tamil.

"Enrum Tamil Vazhga"

Best wishes, Mon

மு.வேலன் சொன்னது…

என் பதிப்பிற்குரிய அக்காளுக்கு நன்றி.

உன் ஆதங்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடு. கீழ்கண்ட தளத்தில் இலவச தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழில் எழுதலாம்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள தம்பிக்கு வணக்கம்.

மு.வேலன் சொன்னது…

வாழ்த்துக்கள்!