ஞாயிறு, 19 அக்டோபர், 2008

மலேசிய பண்பாட்டு மண்பாண்ட கண்காட்சி

18/10/2008, சனிக்கிழமை நானும் என் சித்தப்பா மகன் குமரனும், மலாயா பல்கலைக்கழக (University of Malaya) ஆசிய கலை தொல்பொருட்காட்சியகம் (Museum of Asian Art) ஏற்பாடு செய்திருந்த மலேசிய பண்பாட்டு மண்பாண்ட கண்காட்சிக்கு (Pameran Tembikar Tradisi Malaysia) சென்றிருந்தோம். அங்கு எங்களை தவிர வேறு இந்தியர்களை பார்க்க முடியவில்லை ஆனால் சில மலாய்காரர்கள் வந்திருந்திருனர். பெரும்பாலான இம்மாதிரியான சரித்திரமிக்க கண்காட்சிகளுக்கு என் இனத்தினர்; இந்தியர்களும் இந்துக்களும் கலந்துக்கொள்ளவதும்மில்லை பங்கேற்பதும்மில்லை. இது அவர்களின் அலட்சிய தன்மையா இல்லை அறியாமையா?

அலட்சிய தன்மைதான் காரணம் என்றால், அவர்களே அவர்களைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அறியாமைதான் காரணமெனில், அவர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பல்ல, இந்நாட்டு இந்திய, தமிழ் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். கொலை, குத்து, கற்பழிப்பு மற்றும் சினிமா செய்திகளையே பெருமான்மையில் மையமாக கொண்டு உதிக்கும் ஊடகங்கள் ஏன் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தங்கள் அகங்களில் அழுத்தமாக பிரசுரிப்பதில்லை. மலேசிய திருநாட்டில் நம் முன்னோர்கள் வாழ்ந்துக் கடைப்பிடித்த மரபுகளையும் வழிகளையும் வெளிக்கொனறும் இதுபோலான கண்காட்சி நிகழ்சிகள் பிர இன மக்களின் கடுமையான முயற்சிகளிளாலேயே ஏற்பாடு செய்திருந்தாலும், ஏன் நம் ஊடகங்கள் இராமருக்கு உதவிய அணில் போல் வந்துப்போகக் கூடாது? ஏன் இம்மாதிரியான செய்திகளை என் மக்களின் மனதிற்குக் கொண்டுச் சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது?

இக்கணம் உதித்த ஒரு மலாய் முது மொழியை நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம்; ‘Biar Mati Anak, Jangan Mati Adat’. குழந்தையை இறக்க விட்டிருந்தாலும் கலாசாரத்தை இறக்க விடாதே, இதுவே இதன் கருத்து; என் கருத்துங்கூட.

கண்காட்சியில் பிடித்த சில படங்கள்...

3 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நண்பரே சினிமா கேள்வி பதில் தொடர்பாக உங்களை பதிவெழுத அழைத்திருக்கிறேன். என் பதிவில் பார்த்தீர்களா?

http://vaazkaipayanam.blogspot.com/2008/10/blog-post_21.html

பெயரில்லா சொன்னது…

vanakam, valga valamudan.

umathu atturai miga sirapaga irukirathu.malaysia inthiya makalin methana pokkai miga azhagaga aluthu vadivam pera seythirukirir. matra indiar pol illamal immathiriyana kankatchiku sendru irupathu aacchiriyam,athai aathangathodu katturai amuthaga ennaya anbargaluku alithathu viyapu.

thodarga umathu pani, valarga umathu tamil thai pattru.

பெயரில்லா சொன்னது…

Superb articles. A lots of usefull information.