அரங்கேற்றம்
புதன், 12 டிசம்பர், 2012
புதன், 22 ஆகஸ்ட், 2012
கர்ணன்
மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.
நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.
Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)
பிரிவு:
தமிழ் மொழி,
திரைப்படம்,
நினைக்க நினைக்கும் நாள்
திங்கள், 16 ஜூலை, 2012
சங்க கால உணவு திருநாள் 2012
நேற்று (15/07/2012), ஒரு உணவு திருநாளுக்குச் சென்றிருந்தேன். சங்க கால உணவு திருநாள் 2012, ரோயல் சிலாங்கூர் கிளபில் (Royal Selangor Club, Dataran Merdeka.) இனிதே கொண்டாடப்பட்டது. பிரபல தென்நிந்திய சமயல்காரர் தாமு ஐயா அவர்களின் தலைமையில் சுவையான 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
வரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.
பரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.
தேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.
நல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…
வரவேற்பு பானமாக ஒரு மூலிகை 'பானகம்' தந்து என்னை அமரவைத்தார் நண்பர் அருண்குமார் சேதுராமன். நிகழ்ச்சி ஆரம்பமானதும் பட்டியல்படி உணவுகள் வந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தன. அனைவருக்கும் அளவாகவே ஒவ்வொரு உணவும் பரிமாறப்பட்டது சுவைப்பதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருந்தது.
பரிமாறப்பட்ட பல உணவு வகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நேற்றுதான் அவைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேனும் தினைமாவும், காஞ்சிப்புர இட்லி, சுயம், உக்கரை போன்றவை இதில் அடங்கும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற ஐந்துக்கும் குறையில்லை.
தேனும் தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே விருப்பமாக காணப்படும். மிக கடுமையான வறட்சியைக் கூட தாங்கி பல்வகை மண்ணிலும் வளரக்கூடிய ஆற்றல் மிக்க சத்துணவு தினை. முருகப்பெருமானுக்கு இன்றும் முக்கிய உணவுப் படையலாக தேனும் தினைமாவுமே வைத்து வழிப்பாடு நடைப்பெறுகிறது. இந்த உணவே அன்று கிழவனாக வந்த முருகனுக்கு வள்ளி ஊட்டிய விருந்து.
நல்ல நிகழ்ச்சி. நானறிந்து மலேசியாவில் இம்மாதிரி இதுவே முதல் முயற்சி. இந்நிகழ்வை சிறப்பாக தமிழில் வழிநடத்தி தொகுத்து கொடுத்த சுஷ்மித்தா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிமாறப்பட்ட பல உணவுகளின் சமயல் குறிப்பை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டமை சிறப்பு. ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி. அடுத்த திருவிழாவிற்கு காத்திருக்கிறேன்…
பிரிவு:
அனுபவம்,
நிகழ்வு,
பண்பாடு,
முதல் முதலாய்
வெள்ளி, 16 மார்ச், 2012
பிரம்மம்
"இந்து மதத்தின் உருவ வழிபாடு அன்றைய மேலோட்டமான ஐரோப்பியர் நினைத்தது போல பொருள்களை வணங்கும் அறியாமை அல்ல. இந்து மதத்தின் உருவ வழிபாடு நுட்பமான ஒரு முரணியக்கம் கொண்டது. அதன் தத்துவார்த்தமான சாராம்சம் என்பது உருவமற்ற, அடையாளமற்ற, எல்லையற்ற, மானுடப் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இறை உருவகம்தான். அதை நாம் பிரம்மம் என்றோம். அது கூட ஒரு சொல்தான். இறை அந்த சொல்லுக்கும் அப்பாற்பட்டது."
இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.
இந்த அருமையான வரிகள் காந்தி இன்று (Gandhi Today - http://www.gandhitoday.in/2012/03/1.html) தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'காந்தியின் சனாதனத்தில்' இடம்பெற்றவை.
வியாழன், 24 பிப்ரவரி, 2011
மலேசியா வாசுதேவன் - அஞ்சலி

பிரபல பாடகரும் நடிகருமான கலைமாமணி மலேசியா வாசுதேவன் அவர்கள் 20/02/2011, ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவர் 8000-திற்கும் மேற்பட்ட பாட்டுகளைப் பாடியுள்ளார். அதில் அடிக்கடி நினைவில் வருவது தர்ம யுத்தம் படத்தில் இடம்பெற்ற “ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”.
மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி.
மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி.
http://en.wikipedia.org/wiki/Malaysia_Vasudevan
வியாழன், 30 டிசம்பர், 2010
மலேசியா வெற்றி!
14 வருடங்களுக்குப் பிறகு, நேற்று (29/12/2010), நம் மலேசிய அணி ஆசியன் காற்பந்து சம்மேளனம் சுசுக்கி கிண்ணம் 2010 [Asean Football Federation (AFF) Suzuki Cup 2010] இரண்டாம் கட்ட இறுதி சுற்றில் 4-2 புள்ளியில் இந்தோநேசிய அணியை இந்தோநேசியாவில் கெலோரா புங் கர்ணோ அரங்கத்தில் (Gelora Bung Karno Stadium, Indonesia) வீழ்த்தியது.

கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.
இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.
இந்த கனவை நிறைவேற்றிய கி. ராஜகோபால் அவர்களின் பயிற்சியிலும் வழிகாட்டுதலிலும் தங்கள் திறனை மெருகேற்றிக் கொண்ட மலேசிய அணியின் சாதனைக்கு வாழ்த்துகள்!
இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.
MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)
நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/

கடந்த 26/12/2010, முதல் கட்ட இறுதி சுற்றில் மலேசிய அணி 3-0 ‘கோல்’ (Gol) என இந்தோநேசிய அணியை மலேசியாவில் புகிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் தோற்கடித்தது.
இதற்கு முன், தொடர்ந்து 7 முறையில் மலேசியா ஒரே ஒரு முறை மட்டுமே 1996-ல் இறுதி சுற்றுக்கு தேர்வானது. அப்பொழுது இந்த கிண்ணத்தை டைகர் கிண்ணம் (Tiger Cup) என்பர். இருப்பினும், இந்த இறுதியாட்டம் மலேசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. 0-1 ‘கோல்’ என தாய்லாந்திடம் (Thailand) தோல்வியுற்றது. அப்போதிலிருந்து, தென்கிழக்காசியாவின் காற்பந்தாட்ட மன்னனாக வரவேண்டும் என மலேசியாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறாமலே இருந்து வந்திருந்தது.

இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நம் பிரதமர் நஜிப் அவர்கள் நாளை 31/12/2010 பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறார்.
MALAYSIA BOLEH!!! (மலேசியாவால் முடியும்)
நன்றி:
தி மலேசியன் இன்சைடர் (The Malaysian Insider)
http://www.themalaysianinsider.com/bahasa/article/piala-suzuki-penantian-14-tahun-malaysia-berakhir/
வியாழன், 2 டிசம்பர், 2010
"2012" - தமிழ் மேடை நாடகம்
நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.
இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.

இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.
இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.
அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.
இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!
எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.
இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.
இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.
அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.
இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!
எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)