புதன், 22 அக்டோபர், 2008

வெற்றிப் பாதையில் சந்திரயான்-1

22/10/2008, புதன்கிழமை காலை 6.20 மணிக்கு ஆந்திர பிரதேசதிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையதிலுருந்து, சந்திரயான்-1 (Chandrayaan-1) என்ற ஆளில்லா செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

1380 கிலோ கிராம் கொண்ட சந்திரயான்-1யை தாங்கியவாறு 44.4 மீட்டர் உயரமும் 316 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கேட் (Polar Satelite Launch Vehicle C11), ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 2 நொடிகளில் பூமியின் சரியான சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 386 கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த திட்டத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் திரு. மயில் சாமி அண்ணாத்துரை.

சந்திரயான்-1 பூமியிலிருந்து 387,000 கிலோ மீட்டருக்கு அப்பால்; அதாவது நிலவை 100 கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வந்து, தகவல்களை சேகரித்து பூமியில் உள்ள தரை நிலையத்துக்கு அத்தகவல்களை அனுப்பும். இந்த இலக்கு இன்னும் 15 நாட்களில் அடையப்படும். அதுமட்டுமல்ல, சந்திரயான்-1னிலிருந்து மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) என்ற கருவியை நிலவின் தரைப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு, இந்திய நாட்டு தேசிய கொடியையும் நிலவின் தரைப்பகுதிக்கு இறக்கப்படும்.

வாழ்த்துக்கள் இந்தியா! இந்தியா போலெஹ் (India Boleh)!

மேல் விபரங்களுக்கு:
http://www.isro.gov.in/chandrayaan/htmls/home.htm
http://www.isro.gov.in/pslv-c11/brochure/index.htm






3 கருத்துகள்:

gP சொன்னது…

proud proud day man :)

and me also proud coz part of blogger in tamil was translated by my brother. :D :D :D

நா. கணேசன் சொன்னது…

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

மு.வேலன் சொன்னது…

[நா. கணேசன்]உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் விளக்கங்களை குறிப்பெடுத்தேன்.
வாழ்த்துக்கள்.