அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவன் - அஞ்சலி

பிரபல பாடகரும் நடிகருமான கலைமாமணி மலேசியா வாசுதேவன் அவர்கள் 20/02/2011, ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். அவர் 8000-திற்கும் மேற்பட்ட பாட்டுகளைப் பாடியுள்ளார். அதில் அடிக்கடி நினைவில் வருவது தர்ம யுத்தம் படத்தில் இடம்பெற்ற “ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”.


மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி.



http://en.wikipedia.org/wiki/Malaysia_Vasudevan

திங்கள், 2 பிப்ரவரி, 2009

அஞ்சலி - நாகேஷ்


31 January, 2009 – தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் மன்னன் நாகேஷ் இயற்கை எய்தினார். அவரின் பிரிவு மனதை உலுக்கினாலும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருப்பது, கலங்கிய மனதை ஆதரிக்கிறது. என்னுள் அவர் வாழ்வதற்கு இதுவே சாட்சி!

ஈடு இணையற்ற கலைஞனே நாகேஷ், உமக்கு என் அஞ்சலி.


வியாழன், 20 நவம்பர், 2008

அமைதியான ஓய்வில் எம்.என்.நம்பியார்


தமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.

அவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு!


என்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.

http://www.indiaglitz.com/channels/tamil/article/43122.html
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2315&cls=row3
http://www.hindu.com/2007/03/15/stories/2007031518020200.htm